***18 ம் நூற்றாண்டில் வாழ்ந்து, சமாதியாகிய
நெரூர்-ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் , 20 ம்
நூற்றாண்டில், மீண்டும் அவதரித்து, வாழ்ந்து
17-1-2016 ல் (12.15 pm) சமாதியாகி மீண்டும்,
சூஷ்மமாய், வாழ்ந்து வரும் ஞானச்சேரி-ஸ்ரீசதாசிவ
பிரும்மேந்திரர்***
CONTENTS
12.1: ஸ்ரீசதாசிவ பிருமேந்திரர்(18 ம் நூற்றாண்டு
12.2: திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்
12.3: ஞானச்சேரி-ஸ்ரீசதாசிவ பிருமேந்திரர்(20 ம் நூற்றாண்டு)
Related Article: Pl also Refer
- HRE-34: ஸ்ரீஷிர்டி சாய்பாபா: வாழ்வும்-வளமும்:
https://drdayalan.wordpress.com/2015/12/12/hre-34*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/
12.1.நெரூர்-ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் (18 ம் நூற்றாண்டு)
சதாசிவ பிரும்மேந்திரர் மதுரையில் 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். தந்தை சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். (சதாசிவ பிரும்மேந்திரர் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன்).
பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் சாஸ்திரங்களை கற்றார். இவரின் திறமைகளை கேள்விப்பட்ட மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கினார். சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து “ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே” என்று கூறினார். அதுவே வேத வாக்காக குரு ஆணையாக சிவராமகிருஷ்ணன் அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார்.
சீடனின் பண்பட்ட நிலையை மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரும்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார்.
சதாசிவப் பிரும்மேந்திரர் மனிதர்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டு தவத்தின் விளைவாய் ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். அவதூதராக நடமாடத் துவங்கினார்.
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.
”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே உபதேசமாகக் கொண்ட மன்னர், அம்மணலை சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)
ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார்.
மன்னர், அவரது வலக்கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள்.
வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரும்மேந்திரர் தன் உடலில் நடந்தது தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! ராணிகள், “நடந்து செல்பவர் பெரிய மகானாக இருக்கவேண்டும். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்”! என்று அரசரிடம் வேண்டினார்கள்.வலக்கரத்தைஎடுத்துக் கொண்டு பிரும்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரும்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தி மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை.என்று சொல்லி நகைத்தார் பிரும்மேந்திரர்.
சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரும்மேந்திரர். முகம்மதிய மன்னர் தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரும்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது!குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார்.மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் நடந்து போய்விட்டார்.
சதாசிவ பிரும்மேந்திரர் ஒருமுறை காவிரி ஆற்றின் பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்று மக்கள் கருதினர்.
பல நாட்கள் கழித்து வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்ட காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார்.
நெரூர் வந்த சதாசிவ பிரம்மம் சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா, மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் மகாராஜா ஆகியோரை அழைத்து “இங்கு குகையமையுங்கள். நான் உட்கார்ந்ததும்.விபூதி,உப்பு,மஞ்சள் தூள், செங்கற்பொடி போட்டு மூடிவிடுங்கள்”. ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும் .பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வரும்.அதை 12 அடிக்கு கீழ் வைத்து கோயில் காட்டுங்கள் .இந்த வில்வ விருட்சத்திற்கு எந்த மறைப்பும் வேண்டாம் .மேடை போட்டு விடுங்கள் “என்று அருளினார். அதன்படியே செய்தனர். அவர் சொன்னபடி ஒன்பதாம் நாள் வில்வ மரம் தோன்றியது .(இன்றும் நாம் நெரூரில் வழிபடும் வில்வ விருட்சம் இது தான் ) பன்னிரெண்டாம் நாள் அவர் சொன்னபடி காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி ஒரு சிவலிங்கம் கொண்டு வந்தார் 12 அடிக்கு கீழ் அதை வைத்து கோயில் கட்டினர்.நெரூரீல் மட்டுமே சமாதிக்கு 12 அடிக்கு கீழ் சிவலிங்கத்தை வைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது .
இங்கு துவாதசாந்த பெருவெளியில் சதாசிவ பிரம்மம் எழுந்தருளியிருக்கிறார். சதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதி, காசி விஸ்வநாதர் அமைந்துள்ள கருவறையை சுற்றி வரும் பொழுது அதன் பின்பக்கம் அமைந்துள்ளது.மிக தொன்மையும் பெருஞ்சிறப்பும் பெற்ற இந்த திருகோயில், கருர் அருகில் உள்ள நெருரில், காவிரி கரையோரம் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது .
வேதாந்த ,சித்தாந்தங்களுக்கெல்லாம் மணிமகுடமாக திகழும் மூன்று மகா வாக்கியங்கள் 1.தத்துவ மசி, 2.அகம் பிரம்மாஸ்மி, 3.சர்வம் பிரம்ம மயம்
இந்த யோக நிஷ்டையின் உயர்ந்த மூன்று நிலைகளில் சதாசிவ பிரம்மேந்திராள் தேர்ந்தெடுத்த வழிமுறை “சர்வம் பிரம்ம மயம்” என்ற வழிமுறை ஆகும் .
அதிஷ்டானம்
கரூர் அருகே உள்ள நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் அதிஷ்டானம் அனைவரும் தரிசிக்கவேண்டிய ஒன்று. அதிஷ்டானங்கள் பொதுவாகவே அருட்சக்திகள் உறைந்து கிடைக்கும் இடங்கள். அங்கு அமர்ந்து செய்யப்படும் பிரார்த்தனைகள் பெரும்பாலும் அதி சீக்கிரம் நிறைவேறிவிடும்
ஐந்து இடங்களில் (நெரூர், மானாமதுரை, காசி, பூரி, கராச்சி) அதிஷ்டானம் கொண்டுள்ள ஒரே மகான் பிரும்மேந்திரர் மட்டும்தான்.
12.2.திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்
நெரூர்–சதாசிவ பிரும்மேந்திரரும் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாளும்.
நெரூர்-ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் சம காலத்தவர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள். நெரூர்-சதாசிவ பிரும்மேந்திரரின் திருவாய் மொழிகளை ஓலைசுவட்டில் எழுதி வைத்தவர் திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்.
திருவிசைநல்லூர்-தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவிசைநல்லூர்
ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் துறவு பூண்டபின் அவருக்கு போதேந்ர சுவாமிகள் என்ற திருநாமமிட்டவர் சதாசிவ பிரும்மேந்திர்.
கார்த்திகை அமாவாசை அன்று, புனித கங்கையினைத் தன் இல்லத்தின் கிணற்றிலேயே பெருகச் செய்த ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள்.
ஸ்ரீதர ஐயாவாளின் தகப்பனாரான ஸ்ரீலிங்கார்யர் மைசூர் ஸமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்து வந்தார். அவரது புத்ரனாக அவதரித்த ஸ்ரீ ஐயாவாள் சிறு வயது முதற்கொண்டே சிறந்த சிவ பக்தராகவும், மஹா தேஜஸ்வியாகவும் விளங்கி சகல வித்யைகளிலும் தேர்ச்சி பெற்றவராக பிரகாசித்தார். எதிலும் பற்றற்ற ஞானியாக சிவநாம ஜபத்திலேயே சதா ஈடுபட்டிருந்த அவருக்கு நல்ல குடும்பத்தில் விவாஹமும் ஆயிற்று.
ஐயாவாளைத் திவான் பதவியில் இருக்கும்படி அரசன் கேட்டுக் கொண்டான். ஆனால் ஸ்ரீ ஐயாவாளோ சிவபக்தியின் முன் திவான் பதவி துச்சமெனக் கருதி, தன் தந்தை மந்திரி ஸ்தானத்தில் இருந்து சம்பாதித்திருந்த செல்வங்களை, தன் மனைவி லக்ஷ்மி, மற்றும் தாயாரின் அனுமதியுடன், சகல ஜனங்களுக்கும் வாரி வழங்கி விட்டு, பக்தி மார்க்கத்தை பரப்ப காலக்ஷேபம் செய்யத் தீர்த்தாடனம், க்ஷேத்ராடனம் முதலியவற்றை மேற்கொள்ள மனைவியுடனும், தாயாருடனும் மைசூரை விட்டு வெளியேறி பல க்ஷேத்ரங்களில் பக்தி, ஞானம் உபதேசித்து திருச்சிராப்பள்ளியை அடைந்து அங்கு சில காலம் தங்கினார்.
அந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளியை சிறந்த விஷ்ணு பக்தரான நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். சைவம், வைஷ்ணவம் இரண்டையும் சமமாகவே கருதிய ஸ்ரீ ஐயாவாளைப் சில ப்ராஹ்மணர்கள், அவருடைய உபன்யாஸங்களில் சைவ சித்தாந்தமே அதிகம் எனக் குறை கூறினர். ஆனாலும், அவர் ஒரு மஹான் என்பதை அவர்களாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை. அதைக் கேட்ட அரசர் ஓரு மஹானைப் பரீக்ஷித்தால் அவரது மனம் நோக நடந்ததாக ஆகுமென எண்ணி ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரரை ஸ்ரீகிருஷ்ணனாக அலங்கரித்து வீதிவலம் வரும்படி செய்தார். அது வீதியில் வசித்து வந்த ஸ்ரீ ஐயாவாளின் வாசலை நெருங்கிய போது அவர் தியானத்தினின்றும் எழுந்து ஸ்ரீ கிருஷ்ணாலங்காரம் செய்யப்பட்டிருந்த ஸ்ரீமாத்ருபூதேஸ்வரரை ‘க்ருஷ்ண த்வாதஸ மஞ்ஜரி’ என்னும் துதியை அப்போதே பகவானுக்கு ஸமர்ப்பித்துத் தன்னை மறந்து மெய்யுருகி நின்ற ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாளை அந்தப் ப்ராஹ்மணர்களும், அரசனும் கண்டு உருகினர்.
திருச்சியில் ஸ்ரீஐயாவாள் தங்கியிருந்த சமயம் வெகு நாள் பிள்ளை இல்லாதிருந்து ஒரு புத்திரனை அடைந்ததொரு ப்ராஹ்மணனும் அவனது மனைவியும் குழந்தையை மிகுந்த அன்பைப் பொழிந்து வளர்த்து வந்தனர். ஒருநாள் மாந்தம் அதிகமாகி அந்தக் குழந்தை மூர்ச்சையடைந்தது.
குழந்தையின் இந்த நிலையைக் கண்டு பெற்றோர் கதறினர். காவேரியில், ஸந்த்யாவந்தனங்களை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஸ்ரீ ஐயாவாள் அறிந்து தன் பகவானைத் த்யானம் செய்து ‘தாராவளி‘ என்னும் நக்ஷத்ர ஸங்க்யையை உடைய ஸ்தோத்ரத்தினால் பரமேஸ்வரனைப் பாடி, தீர்த்தத்தை குழந்தையின் மீது ப்ரோக்ஷித்து விபூதியையும் குழந்தையினுடைய அங்கங்களில் இட்டார். உடனே மயக்கம் தெளிந்து குழந்தை விழித்தெழுந்தது.
இது போன்ற செயல்களும் ஐயாவாளின் பாண்டித்யமும், விநயமும், பக்தியும் அவர் அங்கேயே தங்கினால் நாட்டுக்கு நல்லதாயிற்றே என அரசரையும் ஜனங்களையும் ஒருமிக்க எண்ணச் செய்தன. இவ்வாறு அவர்கள் வந்து விண்ணப்பித்த அன்றிரவே தாயாருடனும், மனைவியுடனும் ஸ்ரீ ஐயாவாள் திருச்சியை விட்டுப் புறப்பட்டு விட்டார்.
பல க்ஷேத்ரங்களை தரிசித்து வரும் வழியில் காவேரி தீரத்திலேயே அமைந்த திருவிசலூர் என்ற க்ஷேத்ரத்தில் வேத விற்பன்னர்கள் நிறைந்த அக்ரஹாரத்தில் வசிக்கலானார்.
திருவிசநல்லூரில் கங்கை பெருக்கம்
ஒரு சமயம் ஸ்ராத்தம் செய்ய வேண்டிய ஒரு தினத்தில் ஸ்ரீஐயாவாள் ஸ்நானத்துக்கு காவேரிக்குச் சென்றபோது, பசியினால் களைத்து விழுந்து துடிக்கும் ஓர் புலையனை கண்டு அவனை வீட்டுக்கு அழைத்து வந்து சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை அவனுடைய பசியாற்ற படைத்து விட்டார்.
ஏற்கெனவே அவரிடம் பொறாமை கொண்டிருந்த ப்ராஹ்மணர்கள் அவரது இல்ல ஸ்ராத்தத¢தை நடத்தித்தர மறுத்துவிட்டனர். ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் எவ்வளவு கெஞ்சியும் அந்த ப்ராஹ்மணர்கள் சம்மதிக்காதது கண்டு அவர் விநயமாக புலையனுக்கு போஜனம் செய்வித்ததால் வந்த பாபத்துக்கு என்ன ப்ராயச்சித்தமென அவர்களையே வினவினார். அதற்கு அவர்கள் ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாளை கங்கையில் ஸ்னானம் செய்து வந்தால் மறுபடி ஜாதியில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினர்.
அதற்கு ஸ்ரீ ஐயாவாள் ஸ்ராத்தத்திற்கு சில தினமே இருந்த நிலையில் தன் சரீரமோ, காலமோ இந்த நெடும் பயணத்தை மேற்கொள்ள இடம் தராது என்றும், ஆகவே கங்கையை தான் இருக்கும் இடத்துக்கே தருவித்து விடுவதாகவும் கூறி ஸ்ரீ ஐயாவாள் மனம் வருந்தி தன் வீட்டு முற்றத்திலுள்ள கிணற்றோரம் வந்து ‘கங்காஷ்டகம்‘ எனும் ஸ்தோத்ரத்தை மனம் கசிந்து பாட கங்கை பெருக்கெடுத்து கிணற்றிலிருந்து பொங்கி வழிந்து வீதிவழி ஓடலாயிற்று.
மிரண்டு போன ப்ராஹ்மணர்கள் ஸ்ரீஐயாவாளிடம் ப்ரார்த்திக்க ஸ்ரீ ஐயாவாள் லோக க்ஷேமத்தினை உத்தேசித்து தன் வீட்டு கிணற்றிலேயே ஸ்திரமாக கங்கை அடங்கும்படி ப்ரார்த்தித்தார்.
ஒருநாள் வழக்கம் போல் அர்த்தஜாம தர்ஸனத்திற்காக ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமி சந்நிதிக்கு வந்த ஸ்ரீ ஐயாவாள் எப்போதையும் விட ப்ரகாஸமாகவும், கம்பீரமாகவும் விளங்கியதோடு, மனமுருகி சிவனிடம் “ஸம்ஸாரமாகிய விஸால நாடக மேடையில் எல்லா ரூபங்களையும் தரித்து உன்முன் ஆடிக் களைத்துவிட்ட என்னை, போதுமெனக் கூறி ஏற்றுக் கொள்” என வேண்டி திருவாடுதுறை-கோவிந்தபுரத்தில் ஸ்ரீ மஹாலிங்கரை ஆலிங்கனம் செய்து கர்ப்பக்கிரஹத்தில் ஜோதியில் மறைந்துவிட்டார்.
ஸ்ரீ ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாளின் ‘கங்கார்ஷணத்தை’ நினைவு படுத்தும் விதத்தில் இன்றளவும் ஒவ்வொரு கார்த்திகை மாத அமாவாசையன்றும் அந்தப் புண்ய தீர்த்தம் அங்கு பெருக்கெடுத்து ஜனங்களைப் புனிதமாக்குகிறது.
ஜீவ சமாதி,
சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள்.
அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர் காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு. வேண்டாத எண்ணங்கள் நீங்கி, நாம் வாழ்வில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு கிட்டும்.
சுருக்கமாக, நமது குறைபாடுகளை நீக்கி நமக்கு வளமான வாழ்வை, நமதுவினை பதிவுகளுக்கேற்ப, சீரமைக்க உதவும். அவ்வளவுதான்.
அங்கே போய் தியானம் செய்து அந்த உணர்வோடு கலந்து தன்னை மறக்கவேண்டும், தளம் மாற வேண்டும் என்று ஏதேதோ புரியாத வகையில் சொல்கிறார்களே? என்று சிலர் கூறுவார்கள்.
தியானம் என்றால் ஒரு செயலை முழுமனதுடன், சிந்தனை சிதறாமல் செய்தல்.
ஜீவசமாதியில, கவனம் முழுவதும், அந்த மகானின் உயர் சிந்தனைகளோடு உணர்வுகளும் கலக்க வேண்டும் என்று இருந்தால் போதும்.
பிரபஞ்ச பேராற்றலும் உங்களோடு இணைந்து என்ன மாற்றம் தேவையோ அது இயல்பாக நடந்து விடும்.
எந்த சிறப்பான கோயிலுக்கு போனாலும் சித்தர் பீடம் இருக்கும். விசாரித்து அங்கே போய், அமைதியாக இயல்பாக கவனத்தை அங்கேயே நிலை நிறுத்த மற்றவை தானாக நடக்கும்.
ஜீவசமாதி (ஜீவன் + சமம்+ஆதி).
அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்த வந்த ஜீவனை சமன் செய்தல் என்று பொருள்.
ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இரு கண்களினும் மேலாக பின்பற்றி வருகின்றனர்.
உடலையும் உன்னத்தையும் மாசின்றி பேணி காக்கின்றனர்.அனலமோதும் ஜீவனை ஒரு நிலைப்படுத்தி தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை.
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்கிறார் திருமூலர்.கடவுளை காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள்.ஆனால் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.
இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி.இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் சின் அல்லது ஆதி போன்ற முத்திரையில் யோகி அமரும் ஆசிரமம்தான் “யோகாஸ்ரமம்” எனவும் கூறுகின்றனர்.
சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல. ஞானிகள் தங்களுடைய ஆற்றலும் அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்து விட்டு இறைவனோடு இரண்டறக் கலக்கின்றனர்.
சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்ச நிலை என உரைக்கப்படுகிறது.
இவர்களின் உடல் மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயர் உடலை விட்டு பிரிவதில்லை என்கிறார் திருமூலர்.
எந்த புகழ் பெற்ற கோவிலுக்கு சென்றாலும் ஜீவசமாதி விசாரித்தறிந்து அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எண்ண உயர்வுக்கு பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வுதளமோ தேவையில்லை.
12.3. ஞானச்சேரி-ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் (மீண்டும் 20 ம் நூற்றாண்டு)
***18 ம் நூற்றாண்டில் வாழ்ந்து, சமாதியாகிய
நெரூர்-ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் , 20 ம்
நூற்றாண்டில், மீண்டும் அவதரித்து, வாழ்ந்து
17-1-2016 ல் (12.15 pm) சமாதியாகி மீண்டும்,
சூஷ்மமாய், அருள்பாலித்து வரும் ஞானச்சேரி-ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரர்***
ஆதியில் தத்தாத்ரேயராக, பின் உக்கிர பாண்டியனாக, ஆனாய நாயனாராக, வில்வமங்கள சுவாமிகளாக, அபிராமி பட்டராக பிறவிகள் எடுத்த ஞானிகள் 18ஆம் நூற்றாண்டில் நெரூர்-சதாசிவ பிரும்மேந்திரராக அவதரித்தார்.
தாம் விட்ட இறைபணியை தொடர மீண்டும் 20ம் நூற்றாண்டில் கிருஷ்ணசாமி, ருக்மணி தம்பதிகளுக்கு மகனாக (7 வது பிறவியாக) பிறந்தார். ஞானிகளுக்கு தந்தைவழி குடும்பப் பெயரான வெங்கட்ராமன் என்ற பெயரையும், திருச்சிற்றம்பல நடராஜப் பெருமானின் பெயரையும் பெற்றோர்கள் சூட்டினர்.
இளம் வயதிலேயே ஞானிகள் ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகக் காட்சியும், சோமாஸ்கந்தரின் திருவுருவ காட்சியும் தெரிகிறது எனத் தந்தையிடம் கூறுவார். சந்தோஷமும் பயமும் அடைந்த ஞானிகளின் தந்தையார் ஞானிகளை காஞ்சி பரமாச்சாரியராக இருந்த ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சுவாமிகளிடம் அழைத்து சென்றார். சில மாதங்கள் பெரியவருடன் தங்கினார் ஞானிகள். கடைசியில் மஹாபெரியவர் ஞானிகள் தந்தையிடம் “ காஞ்சி வரதராஜ பெருமாளின் பூரண அருளைப் பெற்றவன். அவனை அவன் போக்கிலேயே விட்டு விடு” என்று கூறி ஆசி வழங்கினார்.
சிறுவயதில் அவர் பிறநத் பாகவதபுரத்தில் உள்ள கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு சிறிய சிறிய இறைபணி செய்துக் கொண்டு வந்தார்.
தானும் அக்கோயிலைப் போல ஒரு ஆலயம் தன் வழிபாட்டிற்கு கட்ட வேண்டும் என்று எண்ணியது குழந்தை உள்ளம்.
1979 ல் ஞானச்சேரி என்ற அமைப்பை ஏற்படுத்தி சதாசிவ பிரும்மேந்திரர் என்ற தீட்சை நாமத்துடன் விளங்கலானார்.
காலம் வரும்போது நானே அதற்கு வழி செய்கிறேன் என்று வரம் அருளிய இறைவன் உருவாக்கித் தந்ததுதான் திருவெளிச்சை–பசுபதீஸ்வரர் மற்றும் சுந்தரவரதராஜர் திருக்கோயில்.
அன்பர்கள் அமைதியும், சந்தோஷமும் அடைந்து குறையிலா பெருவாழ்வு வாழ ஒவ்வொரு சந்நிதியிலும் ஞானிகள் இறைவனை துதித்து பாமாலைகள் பாடுகிறார். இறைவனின் ஆணைக்குட்பட்டு மக்களின் குறைகளை அகற்ற ஞானிகள் தாம் அமைத்த கோயில் வளாகத்தில் அருள்மிகு மகா ப்ரத்யங்கரா தேவிக்கு புதிய ஆலயம் அமைத்து அதை இக்கோயிலின் எல்லைக் கோயிலாக அமைத்துள்ளார்.
தத்தகங்கை ஞானச்சேரி இதழ்கள் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக ஞானிகள் அருளிய பொக்கிஷங்கள் வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. ஞானிகளின் குல தெய்வமான “ஸ்ரீசீதா சமேத ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கும்”, “விஸ்வரூப ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயருக்கும்” ஞானிகளின் அருளுடன் ஆலயம் எழுப்பப்பட்டு எங்கள் குருநாதர், ஞானிகள் அருள்பாலித்து வருகின்றார்
குருவருளும்-திருவருளும் தழைக்க ஞானிகளின் நல்லாசிகளையும் இறைவனின் பேரருளையும் பிரார்த்திப்போமாக.
சர்வம் பிரம்ம மையம்
ஞானிகளின் திருவெச்சை அதிஷ்டானம்
ஐந்து இடங்களில் (நெரூர், மானாமதுரை, காசி, பூரி, கராச்சி) அதிஷ்டானம் கொண்டுள்ள மகான் பிரும்மேந்திரர் மீண்டும் அவதரித்து, ஆறாவது அதிஷ்டானமாக கொண்ட இடம் சென்னை-கேளம்பாக்கம் அருகில் திருவெளிச்சைத் திருத்தலம்.
12.4. ஞானிகள் ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திருக்கு ஷோடஸ நாம வந்தனம் & அர்ச்னை: Added on 22-06-2016
பாகவதபுரத்தில், ஸ்ரீராமசந்திரமூர்த்தியை குலதெய்வமாக கொண்ட ஸ்ரீரகு குல கிருஷ்ணசாமி-ருக்மிணி தம்பதியர்க்கு மகனாக வெங்கட்ராமன்-நடராசன் என்ற திருநாமங்களுடன் விளங்கி, சைவ-வைணவ ஆலயம் நிர்மாணித்து அருள்பாலிக்கும், நம் ஞானிகள் ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திருக்கு ஷோடஸ நாம வந்தனம் & அர்ச்னை.
ஓம் ஸ்ரீமதே ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராய நம:
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்ரீசதாசிவாய தீமஹி
தந்நோ பிரம்மேந்திர ப்ரசோதயாத்
ஓம் கிருஷ்ணசாமி சுதாய நம:
ஓம் ருக்மிணி புத்ராய நம:
ஓம் வெங்கடராமாயா நம:
ஓம் நடராஜாயா நம:
ஓம் ஸ்ரீரகு குல மணியே நம:
ஓம் பாகவத திலகமே நம:
ஓம் பிரும்ம ஞானியே நம:
ஓம் ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திராய நம:
ஓம் ஸ்ரீ சத்குரு நாதா நம:
ஓம் தத்த கங்கையே நம:
ஓம் தத்தக் களஞ்சியமே நம:
ஓம் ஞான வேள்வியே நம:
ஓம் ஞானக் களஞ்சியமே நம:
ஓம் பார்வதி-பதி பாதையே நம:
ஓம் ஸ்ரீநிவாசமே நம:
ஓம் குரு-திருவருளே நம:
ஹரி ஓம் ஸ்ரீகுரு-ஷோடஸ நம பூஜாம் கரிஷ்யே.
ஞானிகளின் மெய்யன்பன்-Prof.A.தயாளன்
Please click the LINK below to view (down-load) the above same “ஞானிகள் ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திருக்கு ஷோடஸ நாம வந்தனம்” in Tamil as pdf format with FIGURES:
LINK(A pdf File that could be downloaded): G02-Gnanigal-Shodasam
——————->>>HRE-12: ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரர்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Related Article: Pl also Refer
- HRE-34: ஸ்ரீஷிர்டி சாய்பாபா: வாழ்வும்-வளமும்:
https://drdayalan.wordpress.com/2015/12/12/hre-34
**************************************************************
மெய்யன்பரே,
- இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
- மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
- இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி
You may please go back to CONTENTS for all the Articles in HRE:
12(A):Hindu Religious Extracts (HRE), இந்து மதச் சாரம்: CONTENTS