காவிரி ஆறு காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சமமலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.
நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, மைசூர், மாண்டியா, பெங்களூர் வழியாக தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
இது பொன்னி ஆறு என்றும் பொன்னி’ என்று பெயர் வந்ததற்கு அதன் நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத் தாது சற்று அதிக அளவில்] இருந்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் மற்றும் சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில், காவிரி (கொள்ளிடம் என்றும் காவிரி என்றும்) இரண்டு கிளைகளாக பிரிகிறது.கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு அருகே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது.
கவேரமுனிவர்-லோபமுத்திரை-அகத்தியர்-விநாயகப்பெருமாள்-காக்கை-காவேரி-பொன்னி
கவேர முனிவர் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பிரம்மனிடம் வேண்டி தவமிருந்தார். அவரது தவத்தை ஏற்ற பிரம்மன், அவர் வேண்டியபடியே ஒரு பெண் குழந்தையை அருளினார்.முனிவர் அவளுக்கு லோபமுத்திரை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.
லோபமுத்திரை, சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், ‘நீ வேண்டும் வரத்தை கேள்” என, தான் நதி உருவமாகி பூமியை வளப்படுத்த வேண்டும் என்று தன் ஆசையை அவள் கூறினாள். ‘கங்கைக்கு இணையான புனிதமுடையவளாய் காவேரி என்று நீ அழைக்கப்படுவாய். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை திருமணம் செய்து வாழ்வாயாக. காலம் வரும் போது நதி வடிவம் எடுப்பாய்’ என்று கூறி மறைந்தார்.
அவர் கூறியபடியே அகத்தியரும் லோபமுத்திரையும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அகத்தியர் லோபமுத்திரையை நதி வடிவத்தை தன் கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார்.
குடகு மலையில் இருவரும் பல நாட்கள் தங்கி சிவ பூசை செய்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அங்கிருந்த நெல்லி மரத்தடியில் தன் கமண்டலத்தை வைத்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் அகத்தியர். அப்போது சிவனின் ஆணைப்படி, லோபமுத்திரை காவேரியாக மாறி நதி வடிவம் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டதால் தேவர்கள் அனைவரும் விநாயகரிடம் முறையிட்டனர்.
விநாயகர் காகமாக மாறி, கமண்டலத்தை கவிழ்த்து லோபமுத்திரையை காவிரியாக பொன்னி பெருக்கெடுக்கச் செய்தார். கண் விழித்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து வருந்தினார். அனைத்தும் இறைவனின் திருவருள் படியே நடைபெறுகிறது என்று உணர்ந்து, காவிரிக்கு வழிகாட்டியவாறு நடந்தார். அவர் நடந்த சென்று பாதைகளில் தான் இன்றைக்கும் காவேரி பாய்கிறது, என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆடி பதினெட்டம் பெருக்கன்று ,காவேரி பெருகி வருவதால் , மக்கள் அன்று காவேரியை சிறப்பாக பூஜித்து மகிழ்கின்றனர்.
காவிரி நதிக்கரையில் அமைந்த திருத்தலங்கள்
வைணவ திருத்தலங்கள்-ரங்க தலங்கள்
ஆதிரங்கம், மத்தியரங்கம், பஞ்சரங்கம், சதுர்த்தரங்கம், அப்பாலரங்கம்.
ரங்கம்=அரங்கம்= மண்டபம்=சபை=ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி
ஆதிரங்கன்-ஆதிரங்கம் மைசூர், ஸ்ரீரங்கப்பட்டணம்
காவேரி ரங்கன்– மத்தியரங்கம்; அனந்தரங்கம் ; ஸ்ரீரங்கம்
பரிமள ரங்கன்– பஞ்சரங்கம்; மாயவரம்,ஸ்ரீதேவி-கங்கை, பூதேவி-காவிரி
சார்ங்கன்– சதுர்த்தரங்கம் ; கும்பகோணம்
அப்பாலரங்கன்-அப்பக்குடத்தான்-அப்பாலரங்கம்; திருப்பேர் (கோவிலடி)-நம்மாழ்வாருக்கு மோட்சம்.
சிவ திருத்தலங்கள்-தேவாரத்தலங்கள்
காவிரியாற்றின் வட கரை (63),
காவிரியாற்றின் தென் கரை(127)
மொத்தம் 190 out of 276
நீர்வளம் அளிக்கும் தென்னிந்திய பொன்னி ஆற்றை பொன்னியம்மன் என்றும், வடஇந்திய கங்கை ஆற்றை கங்கையம்மன், என்னும் போற்றுவது எங்கும் உள்ள தமிழர்களின் கலாச்சாரம்.
பொன்னியம்மன்
சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் கீர்த்தி வாய்ந்தது பாதாள பொன்னியம்மன் கோயில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமையப்பெற்றது.
காவிரியின் துணை ஆறுகள்
கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.
காவிரியின் அணைகள்
கர்நாடகா அணைகள்
1.தலைக்காவேரி, 2.ஹாரங்கி அணை, 3.ஹேமாவதி அணை, 4.கிருஷ்ணசாகர் அணை, 5.கபினி அணை.
தமிழக அணைகள்
6.மேட்டுர் அணை, 7.மாயனுர் மதகு அணை, 8.கல் அணை.
மேட்டூர் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறது.
ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது.
கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது.
காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது.
பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால் , இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர்.
காவேரி கடந்து வரும் பாதை
கர்நாடக மாநிலம்குடகு மாவட்டத்தில் தலைக் காவிரியில் உருவாகி மைசூர் மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையை அடையும்போது ஹேமாவதி, ஹேரங்கி, ஆகிய 2 கிளை ஆறுகளும் காவிரியுடன் இணைகின்றன.
ஸ்ரீரங்கப்பட்டணத்தை தாண்டியவுடன் கேரளாவின் வயநாட்டில் உருவாகும் கபினி ஆறு கர்நாடகாவின் திருமுக்கூடல் பகுதியில் காவிரியுடன் கலக்கிறது.
கர்நாடக மாநிலம் சோமநாதபுரம் அருகே சிவசமுத்திரம் என்ற அருவியாக மாறும் காவிரி ககனசுக்கி அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. பின்பு காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைந்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வந்து சேருகிறது.
தமிழகத்தில் காவிரியின் போக்கு
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது.
இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. அதன் பின் ஓகேனக்கலில் அருவியாக கொட்டி சேலம் மேட்டூரில் அணையாக நிறைந்து ஈரோடு மாவட்டம் மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது.
ஈரோடு நகரைக் கடந்து நாமக்கல் மாவட்டத்தில் நொய்யல் கிராமத்தில் நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கிறது.
நாமக்கல்லை அடுத்து கரூருக்கு அருகே அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர்,திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. வட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது.
வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது.
கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.
காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி கல்லணையை அடைந்த பின் சிறு ஆறுகளாக பிரிந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கங்கையம்மன்
சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து கங்கை பூமிக்கு அவதரித்த கங்கா அவதர தினம் ஜேஷ்டா (ஆனி) மாதம் சுக்ல பட்சம் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது. கங்கோத்ரி ஆலயம் திறக்கப்படுவதும் இன்று தான்! கங்கோத்ரி ஆலயத்திற்கு அருகில் உள்ளது பகீரதன் தவம் செய்த அற்புத இடம்! இந்திய மக்களின் கலாச்சாரத்தையும் ஆழ்ந்த பக்தி மார்க்கத்தையும் ஒருங்கே வளர்த்து, அனைவராலும் போற்றி வழிபடப்படும் ஆறு கங்கை.
கங்கை நதி: https://drdayalan.wordpress.com/2018/02/15/hre-61
புஷ்கரம்
புஷ்கரம் நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும். இந்த விழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறும்.
குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து தங்களுடைய புஷ்கரம் வேண்டும்” என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.
அதன்படி, மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரமானவர், ஆண்டுக்கு ஒருதடவை, குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்வார்.
கவேரி புஷ்கரம்
குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்” என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை 12 நாட்கள் அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன்.
மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் குரு பெயரச்சியாகும்போது அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் 12 நாட்கள் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புஷ்கரம் மேஷம் ராசி (கங்கை), ரிஷபம் (நர்மதை), மிதுனம் (சரஸ்வதி), கடகம் (யமுனை), சிம்மம் (கோதாவரி) கன்னி (கிருஷ்ணா), துலாம் (காவேரி) விருச்சிகம் (தாமிரபரணி), தனுசு (சிந்து), மகரம் (துங்கபத்திரா), கும்பம் (பிரம்ம நதி), மீனம் ராசியில் (பிரணீதா) நதி/ஆற்றிலும் என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த ராசியில் பெயர்ச்சி நாள் முதல் 12 நாட்கள் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும்.
அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.
மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இம்முறை (2017) குரு பகவான் துலா ராசியில் செப்டம்பர் 12 அன்று பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்பட்டது. மேலும் இம்முறை கொண்டாடப்பட்ட காவேரி புஷ்கரம் என்பது முறை வரும் காவேரி மகா புஷ்கரம் ஆகும்…. அதனால் 2017 செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர் 24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும். செப்டம்பர் 25 அன்று தொடங்கி அக்டோபர் 7 வரை அந்திம புஷ்கரமாகவும் கொண்டப்பட்டது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள்:–
கர்நாடகா
தலைக்காவேரி-பாகமண்டலா-குஷால் நகர்-ஸ்ரீரங்கப்பட்டினம்- கிருஷ்ணராஜ் சாகர் அணை-மாண்டியா-ஷிவனசமுத்திரா-பன்னூர்- திருமாக்குடல் நரசிபுரா-தலக்காடு-முடுகுத்தூர்-கனகபுர்.
தமிழ்நாடு
மேட்டூர்-பவானி-பள்ளிப்பாளையம் (ஈரோடு)-கொடுமுடி- பரமத்தி வேலூர்-ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி- திருவையாறு- தஞ்சாவூர்- சுவாமிமலை- கும்பகோணம்- மயிலாடுதுறை- மருதூர் அக்ரஹாரம்-பூம்புகார்.
மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஷ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்
ஆடிபெருக்கு
ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர்.
நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும். அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர். இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர்.
அம்மன் திருவிழாக்கள்
ஊர்மக்கள், பொன்னியம்மனை கிராம தேவதையாக போற்றுகின்றனர். கிழக்கு எல்லை அம்மனாக, பொன்னியம்மனையும், மேற்கு எல்லை அம்மனாக படவேடு அம்மனையும் கூடவே கங்கை அம்மனையும், ஊர்மக்கள், வழிபடுகின்றனர்.
ஜாத்திரை விழா, என்பது சிற்றுர்களில் நடைபெரும் மிகவும் சிறப்பான விழாக்களில் ஒன்று.கங்கை அம்மனையும், படவேடு அம்மனையும் முதலில் வழிபட்டபின்னர் கிராம தேவதை பொன்னியம்மனை வழிபட்டு மாரியம்மன் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
சக்தியை அன்னை-தாயார் என்றும் அம்பாள்-அம்மன் என்றும் பலபல நாமங்களால் போற்றுவது எங்கும் உள்ள இந்து மத கலாச்சாரம்.
தேவி-ஸ்ரீதேவி
ஈஸ்வரி-பரமேஸ்வரி
அம்பிகை– லலிதாம்பிகை
அம்பாள்-கர்பாகாம்பாள்
அம்மன்-பொன்னியம்மன்
மோசூர்-மோட்டூர் கிராம ஸ்ரீபொன்னி அம்மன் ஆலய கும்பாபாபிஷேகம்(25-6-2018)
எங்கள் பூர்வீக கிராமம்-(அரக்கோணம் தாலுக்கா, மோசூர் அடுத்த மோட்டூர்) இந்த கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொன்னி அம்மன் ஆலய கும்பாபாபிஷேகம் ஆனிமாதம், 11-ம் நாள் (25-6-2018), காலை 9.00-10.30 மணியளவில் நடந்தேறியது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மெய்யன்பரே,
• Hindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கில் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
• மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
• இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி.
இங்கே காணப்படும் பொருளடக்கம் (CONTENTS) என்னும் இந்த லிங்கில் (LINKs) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/