Tags
அக்னி தீர்த்தம், உப்புலிங்கம், கந்தமான பர்வதம், காசி யாத்திரை, காசி-ராமேஸ்வரம் யாத்திரை, கோடி தீர்த்தம், சுக்ரீவன் கோயில், சேது சக்தி பீடம், சேதுமாதவர், தனுஷ்கோடி, தீர்த்த யாத்திரை, தீர்த்தங்களும் பலன்களும், பதஞ்சலி முக்தி தலம், பர்வத வர்த்தினி, பாதாள பைரவர், பித்ரு தோஷம், மணல் லிங்கம், மிதக்கும் கல், மூன்றாம் பிரகாரம், ராமநாதசுவாமி, ராமர் பாதம், ராமலிங்கேஸ்வரர்
ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்-பர்வத வர்த்தினி, (மலைவளர்காதலி)
Click for காசி யாத்திரை:https://drdayalan.wordpress.com/2015/10/07/hre-27
மூர்த்தி-தலம்-தீர்த்தம் என மூவகையால் சிறப்பு பெற்றது
இராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் 1948; 1975; 2001 ல் நடைபெற்றது. இதை அடுத்து புதியதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களுக்கான கும்பாபிஷேகம் 20.01.2016 (9.00-10.30 AM) அன்று நடைபெற்றது.
தரிசனம்: 3-7-2017
மூர்த்தி
*மணல் லிங்கம் (ராமநாதசுவாமி)-சீதை ஸ்தாபிதம்
*விஸ்வ லிங்கம் (விஸ்வநாதர்)-ஆஞ்சநேயர் ஸ்தாபிதம்
*ஸ்படிக லிங்கம்-ஆதிசங்கரர் ஸ்தாபிதம்
*உப்பு லிங்கம்-பாஸ்கரராயர் ஸ்தாபிதம்
*ஜோதிர் லிங்கம்(சிவன் ஐக்கியம்)-விபீஷணன் ஸ்தாபிதம்
*இரட்டை விநாயகர்
தலம்
*ஜோதிர் லிங்கங்கத் தலம்
*தேவாரத் தலம்
*சக்தி பீடம்-சக்தி பீடம் 51 சக்தி பீடங்களில் சேது சக்தி பீடம்
*பதஞ்சலி முனிவர்– முக்தியடைந்த தலம்
*மூன்றாம் பிரகாரம்-இந்தியாவிலேயே திருச்சுற்று அமைப்புக்குப் பெயர் பெற்றது
தீர்த்தம்
*தீர்த்த யாத்திரைக்கு இராமேஸ்வரம் என பெயர் பெற்றது.
*தீர்த்தங்கள்-கோவில் உள் 22 தீர்த்தங்கள் கோவில் வெளியே 22 தீர்த்தங்கள்
*காசி யாத்திரை-ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில் முடிக்க வேண்டும்
“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் வணங்கினர்க்கு
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே”
……………………………தாயுமானவர்
*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/
சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம் அமைத்தாள். அகத்தியரின் ஆலோசனைப்படி, அந்த மணல் லிங்கத்தை ராமர் பூஜித்ததால் “ராமநாதசுவாமி‘ என்ற திருநாமம் அமைந்தது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானவர் சுவாமிகள் பாடல் பெற்ற தலம்.
காசி–ராமேஸ்வரம் யாத்திரை
{முதல் ராமேஸ்வரம்⇒அலகாபாத்(திரிவேணி)⇒காசி⇒கயா⇒ மீண்டும் ராமேஸ்வரம்}
ராமேஸ்வரம்-ராநாதசுவாமி-தீர்த்தயாத்திரை
-
ராமநாதர்-பர்வத வர்த்தினி
ராமேஸ்வரம் சிவன் 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் . ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம்.
-
பதஞ்சலி முக்தி தலம்
பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் பின்னப்பட்ட பந்தலின் கீழ் நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.
-
ஸ்படிக லிங்க பூஜை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.
-
மூன்றாம் பிரகாரம்
1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது.
மூன்றாம் பிரகாரம் எப்போதும் திறந்தே இருக்கும். இந்தியாவிலேயே திருச்சுற்று அமைப்புக்குப் பெயர் பெற்றது ராமேஷ்வரம்.
பிரகாரத்தில் சீதை, மணலில் லிங்கம் பிடிக்க, அதற்கு ராமர் பூஜை செய்யும் காட்சி சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர வீரர்களும் இருக்கின்றனர்.
மேலும் நளன், நீலன், கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும் இப்பிரகாரத்தில் உள்ளன.
சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.
அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
-
காசி–ராமேஸ்வரம் யாத்திரை
{ராமேஸ்வரம்-அலகாபாத்(திரிவேணி)-காசி-கயா-ராமேஸ்வரம்}
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.
கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.
காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.
-
ஜோதிர்லிங்கம்
விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம்‘ ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
-
அக்னி தீர்த்தம்- ராமேஸ்வரம் சுவாமி சன்னதி கடல் (காஞ்சி-காமகோடி மடம்)-உஜ்ஜயினி காளி
ராமேஸ்வரம் கடல், “அக்னி தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர்.
அக்னிபகவான், சீதையின் கற்பு தன்னை சுட்டெரிப்பதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை என்றும் வேதனையில் துடித்தான்.
அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டார். அக்னியைப் பார்த்த ராமர், ‘நீ இந்த சமுத்திரத்தில் மூழ்கி உன்னுடைய வேதனையைக் குறைத்துக்கொள்’ என்று கட்டளையிட, அக்னிபகவான் அந்தப் பகுதி சமுத்திரத்தில் மூழ்கினார். அவர் மூழ்கிய இடம் அக்னி தீர்த்தம்.
இதில் மூழ்குகிறவர்களுக்கு சகல பாபங்களும் தீரும். இங்கு அமர்ந்து பித்ருக்களுக்கு நீர் வார்ப்பவர்களுக்கு, பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்; அந்த பித்ருக்களின் தாகம் தணியும் என்று ராமர் ஆசிர்வதித்தார்.
ராமேஸ்வரம் கோவில் முன்புள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம். இது ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் கடுமையான பிதுர் தோஷங்கள் நிவர்த்தியாகும். ராமேஸ்வரத்தில் எல்லா நாட்களிலும் பிதுர் தோஷப் பரிகாரம் செய்யலாம்.
மிகக்கடுமையான பித்ரு தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். திலா(எள்) ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.
மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்த பின்பு அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சீதை தீக்குளித்த போது அக்னி தேவன் சீதா தேவியை தீண்டிய பாவத்தை போக்க அக்னி தீர்த்தத்தில் நீராடியதால் இது அக்னி தீர்த்தம் எனப்படுகிறது.
It may also be noted that
வேலூர் மாவட்டத்தில் திருமாதலம் பாக்கத்தில் சுயம்பு திருமாலீஸ்வரர் கோவில் இருக்கிறது. திருமால் இங்கு ஈசனை நோக்கி தவம் புரிந்து மனோபவம் பெற்றதால் மகாலட்சுமி வாசம் செய்யும் தலமாக விளங்குகிறது.
பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரை பறிப்பவருக்கும் பிரம்மஹத்திதோஷம், பித்ருதோஷம் உண்டாகும். இத்தகைய தோஷம் கொண்டவர்கள் திருமாதலம்பாக்கம் சென்று திருமாலீஸ்வரரை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். பரசுராமர் இங்கு வந்து தன் பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.
செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இச்சன்னதியில் சிரார்த்தம் செய்ய இயலாதவர்களுக்காக லட்சுமி நாராயண பெருமாளே தானே முன்னின்று சிரார்த்தம் செய்விப்பதாக ஐதீகம்.
சிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள், பச்சரிசி, அகத்திக்கீரை, கருப்பு எள், வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு, தோஷம் நீங்கும். தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
-
ராமேஸ்வர தீர்த்தமாடல்
முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும்.
ராமநாதர் கோவில் தீர்த்தங்களும் பலன்களும்
ராமேஸ்வரம் கோவில் சுவாமி தரிசனம் முன் கோவிலில் தீர்த்தமாடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.
கிழக்கு பிதானவாயில் அநுமன் சன்னதி
1.மகாலட்சுமி தீர்த்தம்(எதிரில்): செல்வ-வளம்
பிதானவாயில் அநுமன் சன்னதி மேல்புறம் (2,3 & 4)
2. சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன்.
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை
4.சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
பிதானவாயில் உட்புறம்-2ம் பிரகாரம்(5 & 6)
5. சங்கு தீர்த்தம்(தெற்க்கு பாகம்): வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்(வடக்குக்கு பாகம்): மனஉறுதி பெறுதல்
3-ம் பிரகாரம் மேற்க்கு(7,8 & 9)
7.சேது மாதவ தீர்த்தம்(தெப்ப குளம் எதிரில்): தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம்(சேது மாதவ சன்னதி தென்புறம்)
9. நீல தீர்த்தம்(சேது மாதவ சன்னதி வடபுறம்),
3-ம் பிரகாரம் ; சேது மாதவ சன்னதி முன்புறம்(10,11,12)
10.கவய தீர்த்தம்
11.கவாட்ச தீர்த்தம்
12.கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்-2-ம் பிரகாரம்-வடக்கு-பைரவர் சன்னதி
2-ம் பிரகாரம்-கருவுலம் மேற்கு(14,15&16)
14.கங்கா தீர்த்தம்
15.யமுனை தீர்த்தம்
16.கயா தீர்த்தம்
17. சர்வ தீர்த்தம்: பிறவி பாவங்கள் நீங்குதல்-முதல் பிரகாரம்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்- சுவாமி-அம்மன் சன்னதி நுழைவு வாயில் இடையில்
19.சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி- அம்மன் சன்னதி நுழைவு வாயில்
2-ம் பிரகாரம்
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்-மேற்கு
21.சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்-மேற்கு
22.கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)-வடக்கு
-
ராமேஸ்வரம்-முதல்தரிசனம்:விஸ்வநாதர்–விசாலாட்சி
`ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, “விஸ்வநாதர்‘ என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.
கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும்.
ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.
-
ராமேஸ்வரம் அடுத்து தரிசனம்: ராமநாதர்–பர்வத வர்த்தினி
-
உப்புலிங்கம்
ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர்.
பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.
ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
-
காலில் சங்கிலியுடன் பெருமாள்- சேதுமாதவர்
சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குழந்தை பாக்கியம் இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.
மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.
இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.
-
பாதாள பைரவர்
ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.
-
காவியுடை இரட்டை விநாயகர்
பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.
-
ரங்கநாதர் (விபீஷணன் ஸ்தாபித்தது)
அம்பாள் சன்னதி பிரகாரத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது அமைப்பு.
-
தாழம்பூ
பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.
கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு. பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.
17.ராமநாதர் கோவில் சன்னதிகள்
i. ஆஞ்சநேயர்
ii. நந்தி (22’ x 12’ x 17’)
iii. பிள்ளையார்
iv. முருகன்
v. நவகிரகங்கள்
vi. விஸ்வநாதர்–விசாலாட்சி-ராமநாதர் சன்னதி இடப்புறம்
vii. ராமநாதர்-மூலவர்
viii. ஸ்படிக லிங்கம்-ஆதிசங்கரர் (5 AM)
ix. உப்புலிங்கம்- ராமநாதர் சன்னதிக்கு பின்புறம்
x. ஜோதிர்லிங்கம்-சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு
xi. பர்வதவர்தினி-மலைவளர்காதலி
Xii. இரட்டை விநாயகர்-அம்பாள் சன்னதி
xiii. பள்ளிகொண்ட பெருமாள்
xiv. நடராஜர்
xv. மஹாலஷ்மி
xvi. பாதாள பைரவர்-கோடிதீர்த்தம் அருகில்
xvii. சேதுமாதவர்-லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர்
xviii. மேல் கோபுர–விநாயகர்
xix. மேல் கோபுர–முருகன்–பாம்பன் சுவாமிக்கு அருளியவர்.
திருவிழாக்கள்:
மாசி-மகா சிவராத்திரி, வைகாசி-வசந்தோற்சவம், ஆனி-ராமலிங்க பிரதிஷ்டை உற்சவம், திருக்கல்யாணத் திருவிழா, நவராத்திரி விழா, கந்தசஷ்டி விழா, ஆருத்ரா தரிசன விழா ஆகியன முக்கிய விழாக்களாகும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ராமேஸ்வரத்தில் மேலும் பார்க்க வேண்டிய இடங்கள்
- உஜ்ஜயினி காளி–அக்னி தீர்த்தம் அருகில் (நகர்-கிழக்கு)
- முனீஸ்வரர்–தெற்கு கோபுர வாசல் எதிரில் (நகர்-தெற்கு)
- நம்பு நாயகி (நகர்-மேற்கு)
- பத்ரகாளி (நகர்-வடக்கு)
- ராமர் பாதம்–கந்தமான பர்வதம்
சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடம், “ராமர் பாதம்‘ சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்ற பின் ராமபிரானும், லட்சுமணனும், அனுமான் சேனைகளுடன், ராமேஸ்வரம் கந்த மாதன பர்வதம் என்னும் இடத்தில் நின்று இலங்கை செல்ல கடலில் பாலம் அமைப்பது என, ஆலோசனை செய்ததாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் நின்று, ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதையும் கண்டு ரசிக்க முடியும். இக்கோயிலுக்கு சென்று திரும்பினால், இழந்து விட்ட குலப்பெருமைகளை மீண்டும் பெறலாம் என, காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுவதால், ராமர் பாதம் கோயிலுக்கு சென்று வரலாம்.
- சாட்சி அநுமார்
- ராமர் தீரத்தம்
- ராமர் கோவில்
- கிருஷ்ணன் கோவில்
- பஞ்சமுக அநுமார்
- மிதக்கும் கல்
- சீதாதீரத்தம்
- லஷ்மணன் தீரத்தம்
- சுக்ரீவன் கோயில்
சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது.
தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.
-
வால் இல்லா ஆஞ்சநேயர்
கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் வருந்தினார்.
அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது.
ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.
-
தீவுக்குள் ராமர் கோயில்
விபீஷணன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு “கோதண்டராமர்‘ என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.
அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில்,
வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.
-
மிதக்கும் பாறைகள் துளசி பாபா மடம்
ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்க குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார். பாறைகளை கடலுக்குள் போட்டார். அந்த பாறைகள் மூழ்காமல் மிதந்தன. மிதந்த பாறைகளின் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் ராமர்.
இந்த பாறைகள் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன. இதைத் தான் ராமர் பாலம் என்று அழைக்கிறோம்.
பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ், பத்திரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே! புதுச்சேரியில் உள்ள அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்.
இந்த துளசி பாபா மடத்தில் ராமர் பயன்படுத்திய பாறைகள் , தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் ஒரு சமயம் கங்கைக் கரையில் மரங்களின் கனிகளைப் பறித்துத் தின்பதும் மரக்கிளையில் தாவித் திரிவதுமாக இருந்தான்.
அப்போது சற்று தூரத்தில் ஒரு அந்தணர் சாளக்கிராமத்தை வைத்துப் பூஜை செய்து கொண்டிருப்பது அவன் கண்களில் பட்டது.
மெதுவாகச் சென்று விளையாட்டுத்தனமாக அந்தச் சாளக்கிராமத்தை எடுத்துக் கங்கை நீரில் வீசி எறிந்து விட்டான்.
கோபம் கொண்ட அந்தணர் நீ தண்ணீரில் எதை எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என்று சாபமிட்டார். அதனால்தான் கடலில் நளன் வைத்த கற்கள் மூழ்கிவிடாமல் நின்றன.
-
தனுஷ்கோடி
இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரியத் துனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.
இங்குள்ள வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். இங்குள்ள கோதண்டராமர் கோயில் ராமேஸ்வரத்திலிருந்து 12 கி. மீ., தொலைவில் உள்ளது.
- வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி,(தனுஷ்=வில்) என்றனர்.
- கோடி என்பது முனை. வானைத் தொடும் முனை ‘கோடு’. அதுபோலக் கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தக் ‘கோடி
அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது.
ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமானபோது இந்த கோவிலும் சிதைந்து போனது.
அந்த புயலுக்கு பின்னர், அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன.
தனுஷ்கோடி அழிந்த பிறகு, ராமேஸ்வரம்-ராமநாதர் கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதுர் கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.
RELATED ARTICLE(காசி யாத்திரை)
- HRE-27:காசி புனித யாத்திரை: 7-10-2015
https://drdayalan.wordpress.com/2015/10/07/hre-27
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மெய்யன்பரே,
- Hindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
- மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
- இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி.
- இங்கே காணப்படும் பொருளடக்கம் (CONTENTS) என்னும் இந்த லிங்கிள் (LINK) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
- Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/