*மாபலிசக்ரவர்த்தி, பரசுராமர், விபீஷணன், ஹனுமான், மார்க்கண்டேயர், வியாசர், அஸ்வத்தாமன்–இவர்கள் அனைவரும் சிரஞ்சீவிகள்.
*இவர்கள் உலகில் பல நன்மைகள் புரிந்து ஆலையங்களையும் பாதுகாப்பவர்கள்.
*நாம், ஆலைய தரிசனம் முடித்ததும், கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம். அப்போது அவர்கள் நம்முடன் வீடுவரை வருவார்களாம்.
*அதனால்தான், கோயிலுக்குச் சென்று விட்டு நேரே தம் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி, ஆண்டவனையும் சிரஞ்சீவிகளையும் வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.
19.1: மகாபலி சக்கரவர்த்தி
மகாபலி சக்கரவர்த்தி, பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனுமான, பலி அரசனானவுடன் இந்திராதி தேவர்களை வென்று மூவுலகையும் கைப்பற்றினான். தேவர்கள், பலிச்சக்கரவர்த்தியை அடக்க விஷ்ணுவை வேண்ட, விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து, பலிச்சக்கரவர்த்தியிடம் தனக்கு நித்திய அக்கினி ஹோத்திரம் செய்ய, மூவடி நிலம் தானமாக கேட்டார்.
பலிச்சக்கரவர்த்தி, மூவடி நிலத்தை வாமனனுக்கு தாரை வார்த்து தருகையில், அசுரகுல குருவான சுக்கிராச்சாரியார், நீரைத் தாரை வார்த்து தரும் சொம்பின் மூக்கில் வண்டு வடிவத்தில் அமர்ந்து நீர் வராமல் தடை செய்தார்.
இதனை அறிந்த வாமனர் தருப்பைப் புல்லினால் தடையை நீக்கிட, சொம்புலிருந்து நீர் வர தானம் முடிந்தது. வாமனன் ஓங்கி உயர்ந்து ஒரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு நிலம் தருமாறு பலிச்சக்கரவர்த்தியிடம் கேட்க, பலி மூன்றாவது அடியை தன் தலை மீது வைக்குமாறு வேண்டிட, அவ்வாறேசெய்த வாமனன், பலிச்சக்கரவர்த்தியை பாதாள உலகத்திற்கு அனுப்பினர்.
மகாபலி, வாமனரிடம் தான், ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அடுத்து வரும் சார்வாணி மனுவந்திரத்திலே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகத்தில் சகல சம்பத்துகளும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார்,மகாவிஷ்ணு.
19.2:பரசுராமர்
பரசுராமர் (பரசுராம பார்கவர்)விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். திரேத யுகம் காலம் ஜமதக்கினி – ரேணுகா மகன் ஆவார் (பரசு=கோடாலி). கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசுராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார்.
ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில், பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராம பாணத்திற்கு இரையாக்கிவிட்டு, “நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக” என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார்.
சத்திரியர்கள் மீது கோபம் கொண்டு சத்திரிய குல மக்களை குறிப்பாக கார்த்தவீரிய அருச்சுனனை அழித்தவர். இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.
இவரை ராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் தரிசிக்கலாம். ஸ்ரீராமனுக்கு வைஷ்ணவதனுசை அளித்தருளினார் பரசுராமன். அறம் தவறிய அரசனான ராவணனை அழிக்க ஸ்ரீராமனுக்கு உதவி புரிந்தார்.
19.3: விபீஷணன்
விபீஷணன் ராவணனின் இளைய சகோதரன். பிரம்மாவிடமிருந்து என்றும் நிலைத்திருக்கும் தன்மையை (மரணமில்லா வாழ்வு) வரமாக பெற்றவன். தர்மத்திற்காக வாழும் அவன் ஒரு சிரஞ்ஜீவி. எங்கெல்லாம் நேர்மை இருக்கிறதோ அங்கெல்லாம் விபீஷணன் இருப்பான்.
சிறந்த ஞானியான விஸ்ரவஸுக்கும் அசுர குல கைகேசிக்கும் பிள்ளைகளாக பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன். விஸ்ரவஸ், பிரம்மனின் பிள்ளையான புலஸ்தியரின் புதல்வனாவார். ஆகையால், பிரம்மாவின் ஞானமும் நற்குணமும் தன் தந்தையிடம் இருந்து மரபின் வழியில் விபிஷணன் பெற்றான்.
ராவணனும் கும்பகர்ணனும் வளர அச்சமும் விபீஷணன் வளரும் பொழுதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மலர்ந்தது.
ஒரு நாள், விஸ்ரவஸ்ஸின் மூத்த மகனும் செல்வத்திற்கு அதிபதியுமான குபேரன் தன் தந்தையின் ஆஸ்ரமத்திற்கு வருகைப் புரிந்தான். அவனுடைய செல்வமும் மகிமையும் ராவணனுக்கு பொறாமையை உண்டாக்கியது. தானும் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனைப் போல் விளங்க வேண்டும் என்று விரும்பினான். சக்தியும் மகிமையும் பெற தவம் ஒன்றே வழி என்று தன் பிள்ளைகளுக்கு உரைத்தார் விஸ்ரவஸ்.
விஸ்ரவஸ்ஸின் பிள்ளைகள் மூவரும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினர். விபீஷணன் ஒற்றைக் காலில் நின்றபடி ஐயாயிரம் வருடங்கள் கடுந்தவம் செய்தான். அவனுடைய தவம் கடவுளர்களை திருவுளங்கொள்ள வைத்து அவன் மேல் பூமாரி பொழியச் செய்தது.
பிரம்மன் விபீஷணனுக்கு, மரணமிலா பெருவாழ்வை, விபீஷணன் வாழும் வரை தர்மம் அழிந்து போகாது என்று வரமாக வழங்கினார்.
உண்மைக்கும் நீதிக்குமான வழி அத்தனை எளிதானது அல்ல. அதுவே சகோதரர்களை, குடும்பத்தை மற்றும் அரசாட்சியை விட்டு விபிஷணனை விலகும்படி செய்து இராமனிடம் தஞ்சத்தைக் கோரியது.
19.4:அநுமான்
மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை ஒரு பழம் என்று நினைத்து வானில் பாய்ந்தார். ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். சூரியனைப் பிடிக்க விரும்பிய அனுமன், ராகுவையும் பிடிக்க முயன்றார்.
ராகு, இந்திரனிடம் சென்று முறையிட இந்திரன், குழந்தை என்றும் பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன் தாடை உடைபட்டு விழுந்தார்.
தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். தேவர்களும் அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட, பிரம்மா தனது கரத்தால் தடவிக் கொடுக்க, அனுமன் மீண்டு எழுந்தார்.
பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, ‘இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்’ என்று சொன்னார்.
இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
வருணன்-காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார். குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.
விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்-பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார். பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்று அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும் என வரமளித்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.
ராமராவண யுத்தம் நடக்கிறது. அப்போது தேவேந்திரனையே வெற்றி கொண்ட ராவணனின் குமாரனான இந்திரஜித் பிரம்மாஸ்த்திரத்தைப் போட்டு வானர சைன்யங்கள் எல்லாவற்றையும் மயக்க நிலையை அடைந்தார்கள்.
பிரம்மாஸ்ஸ்திரத்துக்கு கட்டுப்படாதவர்கள் : அநுமன், விபீஷணன், ஜாம்பவான் .இரவு வேளை, இரண்டுபேரும் யார் யார் எங்கெங்கே கிடக்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டே வந்தார்கள். ஓரிடத்தில் ஜாம்பவான் படுத்திருந்தார். அவர் பிரம்மாவின் புத்திரர். எனவே அவரை பிரம்மாஸ்திரம் பாதிக்கவில்லை. அவருக்கு விபீஷணரை மட்டுமே பார்க்க முடிந்தது. விபீஷணரைப் பார்த்து, ‘அநுமார் உயிரோடு இருக்கிறாரா?’ என்று கேட்டார். விபீஷணருக்கோ ஒரே ஆச்சரியம். ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் போன்ற போர் வீரர்கள் பலர் இருக்கையில் அநுமனை மட்டும் குறிப்பாகக் கேட்கிறாரே என்று. உடனே அநுமார் ஜாம்பவானின் முன் சென்று அவரை வணங்கினார். விபீஷணரின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் ஜாம்பவான் கூறுகிறார்.
அநுமார் உயிர் பெற்றிருந்தால் போதும், மற்றவர் உயிர் பெற்று எழந்து விடலாம். அநுமார் உயிரை இழந்துவிட்டாலோ மற்றவர் உயிருடன் இருந்தாலும் மடிந்து போனது போல்தான்.
ஜாம்பவான் தான் அநுமாருக்கு ஊக்கத்தையும் உற்சாத்தையும் ஊட்டி இமயமலையிலிருந்து ஸஞ்ஜீவி மூலிகையைக் கொண்டுவரச் சொன்னார். அநுமார் அந்த மூலிகையைத் தேடுவதில் நேரத்தை வீணடிக்காமல் ஸஞ்ஜீவி பர்வதத்தையே பெயர்த்து கொண்டு வந்து வானர சைன்யங்களுக்கு மத்தியில் வைத்து லட்சுமணர் உள்பட அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.
சீதையைவிடுத்து உன் ஆவியைக் காத்துக் கொள்’ என்று ராமபிரான் விடுத்த அறிவுரையை ராவணனின் தர்பாரிலேயே அவனுக்கு எடுத்துக் கூற ராவணன் அதைக் கேட்டு வெகுண்டு எழுகிறான். ஹநுமன் வாலில் தீயிடச் சொல்லுகிறான். அந்த தீயைக் கொண்டே இலங்கையை எரிக்கிறார்.
ஸஞ்ஜீவி பர்வதத்தை விளையாட்டுப் போலத் தூக்கிக் கொண்டு பறந்தோடி வந்த அநுமான் என்று தோன்றும்படி ராம நாமம் ஒலிக்குமிடமெல்லாம் பணிவாக அமர்ந்து ராமரஸத்தில் மதுர ரஸத்தில் மூழ்கித்திளைத்திருப்பார். அந்த அடக்கம்தான் அவரை உச்சநிலைக்கு உயர்த்தியது.
19.5: மார்கண்டேயர்
மார்கண்டேயர் தந்தை மிருகண்டு முனிவர் தாயார் மருத்துவதி இவர்களுக்கு அப்போது உள்ள ஊர் காசி அருகே உள்ள தொண்டி என்ற கிராமம். இந்த ரிஷி தம்பதிகளுக்கு புத்ரபாக்யம் இல்லாமல் நீண்ட நாட்களாக இறைவனை வணங்கினார்கள்.
திருக்கடவூர் திருக்கோவிலை வந்து சேர்ந்தார்கள். தம்பதி சமேதராய் அங்கு எல்லா இறைவனையும் ஒருசேர பார்த்து ரசித்தார். விநாயகர் இருக்கக் கூடிய நைருதிபாகம் (கன்னிமூலை) இடத்தில் ஓர் குழலை அமைத்து கொண்டு ஒரு மண்டலம் ஆத்மார்த்த சிவபூஜை செய்ய தம்பதிகளுக்கு பிள்ளைபாக்கியம் அருளியது.
சிவபெருமான்,16வயது மட்டுமே வாழக்கூடிய ஒரு குழந்தை தங்களுக்கு குழந்தை பேறாக அமையும் வரத்துடன் மட்டுமல்லாமல் அக்குழந்தை நிறைந்த ஞானத்தொடு அமையும் என்ற வரத்துடன் பிள்ளை பாக்கியம் அளித்தார்.
குறிப்பிட்ட 16வயது வந்தவுடன் மார்கண்டேயன் தனக்கு அளிக்கப்பட்ட ஞானவரத்தின் காரணமாக சிவன் நோக்கி பூஜை செய்ததன் காரணமாக தனக்காக உக்ர மூர்த்தியாக காலனை காலால் உதைத்தார். தனது கொடுக்கப்பட்ட வரம் மாறாமல் என்றும் 16 வயதிலேயே (சிரஞ்சீவி வரம்) இருப்பதற்கும் அருள் பாலித்தார் ஈசன்.
19.6:வியாசர்
- வேதங்களை ரிக்,யஜுர்,சாம,அதர்வண என நான்காகப் பகுத்தவர் வேதவியாசர்
- மகாபாரதம் அளித்த கவி-ரிஷி கிருஷ்ண த்வைபாயனர்.
- பதினெட்டு புராணங்களையும், அவற்றுடன் கூடிய உப புராணங்களையும் இயற்றியவர் வியாசர்
- வேதாந்த தரிசனத்தின் மூல நூல்களில் ஒன்றான பிரம்ம சூத்திரம் இயற்றியவர்.
வசிஷ்ட மரபில் வந்த பராசர முனிவருக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர் கிருஷ்ண துவைபாயனர். கிருஷ்ண=கருப்பு நிறமுடையவர்.துவைபாயனர்=“தீவில் வளர்ந்தவர்” அல்லது தீவின் வழி வந்தவர்.
சத்யவதி பின்னர் குரு வம்சத்தில், பரத மன்னரின் மரபில் வந்த சாந்தனுவைத் திருமணம் செய்து கொண்டதால், வியாசரின் வாழ்க்கை குரு வம்சத்துடன் தொடர்பு கொண்டதாகிறது. வியாசருடன் நியோக முறை மூலம் இணைந்து குரு வம்சத்து ராணிகள் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரைப் பெறுகிறார்கள். எனவே, பாண்டவர்கள், கௌரவர்கள் இருவருக்கும் மூதாதையாக இருப்பவர் வியாசர் என்றாகிறது.
திரௌபதி சுயம்வரத்திற்குப் பிறகு அவள் ஐவருக்கு மனைவி ஆவது தர்மமா என்று குழம்பி நிற்கும் இடத்தில் வியாசர் வந்து விளக்கம் அளிக்கிறார்.
ராஜசூய யாகத்தின் முடிவில் சிசுபால வதம் நிகழ்கிறது. அது ஒரு அபசகுனமோ என்று கவலை கொண்டிருக்கும் தருமனுக்கு வியாசர் அறிவுரை வழங்குகிறார்.
யுத்தம் உறுதி என்று இரு தரப்பும் முடிவு செய்தபிறகு திருதராஷ்டிரனிடம் வந்து வியாசர் பேசுகிறார். யுத்தக் காட்சிகளைக் கண்டு உரைக்கக் கூடிய ஞான திருஷ்டியை சஞ்சயனுக்கு வழங்குகிறார். போர்க்களத்திற்கும் வியாசர் வருகிறார். அபிமன்யு மரணத்திற்குப் பின் கலங்கி நிற்கும் பாண்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.
போரின் இறுதிக் கட்டத்தில் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் உலகை அழிக்கும் அஸ்திரங்களை ஏவ, இருவரையும் அமைதிப் படுத்தி அவற்றைத் திரும்பப் பெற அறிவுறுத்துகிறார்.
வியாசர் கிருஷ்ண-வாசுதேவனும் இரு தனித்த தெய்வீக அவதாரங்களானாலும், சிந்தனை அளவில் ஒருவரே தான். ஒரே தத்துவ ஞான விருட்சத்தின் இரு கிளைகள். தர்மத்தையும், மானுட வாழ்க்கையையும் குறித்த அவர்களது பார்வைகள் ஒன்றே.
ஒருவர் மகரிஷியாக உலக நலனுக்காக தர்மத்தைப் போதித்துக் கொண்டே இருக்கிறார். மற்றொருவரும், எப்போதும் பற்றற்ற யோக சமநிலையுடன் நடைமுறையில் யாதவ மன்னனாக, பாண்டவர்களின் துணைவனாக, அதர்மத்தை அழிக்க போர்க்களத்தில் இறங்குகிறார். இந்த மண்ணின் அழியாத தெய்வீக ஞானம் இவர்கள் இருவரது சிந்தனையும் மொழியும் ஒன்று கூடும் மகத்தான தருணத்தில், பகவத்கீதையாக வெளிப் படுகிறது.
19.7: அஸ்வத்தாமன்
அஸ்வத்தாமன், துரோணர் மற்றும், கிருபரின் உடன்பிறந்த சகோதரியின் மகன். தனது தவத்தால் ஈசனை மகிழ்வித்த துரோணாச்சார்யர், இறையருள் அம்சத்துடன் இணைந்த மகனைப் பெற்றார். அஸ்வத்தாமன் பிறந்ததும், உச்சை ஸ்ரீவஸ்ஸீ என்ற தேவலோக குதிரையின் சத்தம் போன்ற ஒலியை எழுப்பியதால், அஸ்வத்தாமன் எனப் பெயர் அமைந்தது.
கிருஷ்ணா! நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது. சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அதன் ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத் துக்கும் கதவடைத்துப் போடட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்”
அஸ்வத்தாமன் காற்றோடு கரைந்துபோனான். யுகாந்திரங்களைத் தாண்டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ்சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான்.
மஹாபாரத போரின் போது நடுநிவை வகித்தவர்கள்:பலராமன், விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி.
போர் முடிவில் கௌரவர் தரப்பில் கிருபாச்சாரியார், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே உயிருடன் எஞ்சினர்.
பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர்.
கிருபாச்சாரியார், கிருதவர்மன் அதர்மத்தின் பக்கம் நின்று தர்மத்தையும் தர்மத்தின் பககம் நின்ற கண்ணனுக்கு எதிரே ஷத்திரிய தர்மத்தின்படி போர் செய்து தர்மம் வென்ற போரின் இறுதியிலும் விளங்கியபடியால் இவ்விருவரையும் சிரஞ்சீவிகளுடன் கருதுவது பொருந்தும்
19.8: கிருபாச்சாரியார்
கௌதம ரிஷியின் வழித்தோன்றலாக வந்தவர். சரத்வான் கடுமையான தவங்களைச்செய்து , பலவிதமான அஸ்திரங்களை ஏவும் பயிற்சியைப் பெற்றார். ஒரு முறை சரத்வான் தவம் செய்து கொண்டிருந்த போது, இந்திரன் அவ்ரின் தவ வலிமையைக் கண்டு நடுங்கி,அவருடய தவத்தைக் கலைக்க அப்ஸரஸ் பெண்ணை அனுப்பினான்.
அப்ஸரஸ் மங்கையின் நடனத்தால் சரத்வான் தவநிலை கலைந்து,கண்விழித்தார். மங்கையின் மீது அவர் மயக்கம் கொண்டார். தவத்தை விடுத்து அவளுடன் வாழலானார். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் பிறந்ததும் சரத்வான் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். அப்ஸரஸ் விண்ணுலகம் சென்றாள். ஆணும், பெண்ணும் ஆகிய இரு குழந்தைகளும் வனத்தில் விலங்குகளால் வளர்க்கப்பட்டனர்.
ஒருமுறை சந்தனு மகாராஜா வனத்திற்கு வந்தபோது விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் அழைத்து வந்து தம் அரண்மனையில் வளர்த்துவந்தார். அவர் கிருபையுடன் (கருணையுடன்) அழைத்து வந்ததால் அக்குழந்தைகளுக்குக் கிருபர், கிருபி என்று பெயரிட்டு வளர்த்தனர்.
கிருபர், தம் தந்தை சரத்வான் போலவே அஸ்திர வித்தைகளை நன்கு கற்றுத் தேர்ந்தார். தாம் கற்றறிந்தவற்றைப் பிறருக்கும் கற்றுத்தரும் ஆற்றலும் அவரிடம் இருந்ததை அறிந்த பீஷ்மர் அவரைப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசிரியராக நியமித்தார்.
கிருபருடைய சகோதரி கிருபியை துரோணருக்கு மணம் செய்வித்தார். பல ஆண்டுகள் கழிந்த பின்னர் சரத்வான் தம் குழந்தைகள் இருக்கும் இடத்தை தவவலிமையால் அறிந்து அஸ்தினாபுரம் வந்தார். தம் கற்றறிந்த கல்விச் செல்வங்களை யெல்லாம் கிருபருக்குக் கற்றுத் தந்தார்.
போரின் போது நடுநிவை வகித்தவர்கள்:பலராமன், விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி. கிருபர், துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்தவர், மகாபரதப் போரில் கௌரவப் படையின் பதினோறு படைத்தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.
மூவரும் பாண்டவர்கள்அடைந்த வெற்றிக்குப் பிறகு, காட்டில் மறைந்திருந்தார்கள். துரியோதனின் வீழ்ச்சியால் மனம் கொதித்த அஸ்வத்தாமா,பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.
கிருபர் அவ்னுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். “துரியோதனன் பெரியோர்களை மதிக்கத் தெரியாதவனாக, பலரால் தூண்டப்பட்டுத் தவறான பாவச்செயல்களைச் செய்தான். ஆகையால் அவன் இந்த நிலையை அடைந்தன். நாமும் அவனைப் போல,நடந்தால் நமக்கு அவனுடைய நிலையே கிடைக்கும், நாம் திருதராஷ்ட்ர மன்னனைக் கலந்து ஆலோசித்துவிட்டு, அவ்ர்கள் சொல்படி நடப்போம்” என்றார். கிருத வர்மா என்ற யாதவ மன்னரும் அவ்வாறே கூரினார். ஆனால், கிருபரின் யோசனையை அவன் ஏற்கவில்லை.
கிருபர் அஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத் தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே ஆசிரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத் தந்தார்.
19.9:கிருதவர்மன்
கிருதவர்மன் கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன். மகாபாரதம் தவிர விஷ்ணுபுராணம்,பாகவதம் மற்றும் அரிவம்சம் பழங்கதைகளிலும் இவன் பேசப்படுகிறான்.
குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் கண்ணனின் நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன்.போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன்.
அசுவத்தாமன் பழிக்குப் பழியாக இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன்,சிகண்டி,பாஞ்சாலியின் ஐந்து சிறுவர்கள் என படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன்.
போர் துவங்குவதற்கு முன், ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாற விரும்புபவர் மாறலாம் என தருமர் கூற, திருதராட்டினரின் இரண்டாம் மனைவியின் மகன் யுயுத்சு கௌரவர் அணியிலிருந்து, பாண்டவர் அணிக்கு மாறி அவர்கள் சார்பாக போரிட்டான்.
சாத்யகி, கண்ணனிடமும், அருச்சுனனிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சாத்யகியும், அருச்சுனனும் துரோணரிடம் ஒன்றாகப் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில், சாத்தியகி பாண்டவர்களை ஆதரித்தான். கண்ணன் பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூது சென்ற போது சாத்தியகியும் உடன் சென்றிருந்தான்.
பாரதப் போரில் கலந்துகொண்ட யாதவ குல வீரர்களுள் சாத்தியகியும், கிருதவர்மனும் முக்கியமானவர்கள். எனினும், இருவரும் எதிர்த் தரப்புகளில் சேர்ந்து போரிட்டனர். சாத்தியகி பண்டவர்களுடன் சேர்ந்து போரிட, கிருதவர்மன் கௌரவர்கள் பக்கம் நின்றான்.
Please go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/